Monday, September 28, 2009

எப்படித்தான்../திரும்பிவரும் எதுவும்..

கண்ணு ஒளி எரிச்சதோ..
செவ்வொதடு கடிச்சதோ..

சின்ன இடை வெட்டிச்சோ..
நடை அழகு மிதிச்சதோ..

எப்படித்தான் செத்துச்சோ..
உசிரோடு இருந்த எம்மனசு.!
----------------------------------------------------------

அழுவதையும்

அடம்பிடிப்பதையும்

விட்டுவிடத்தான் நேர்கிறது..


அப்புறமென்ன..!

ஆறுதல்களுடனும்

தேறுதல்கள்டனும்

தொடர்கிறது வாழ்க்கை.


பின் ஒரு நாளில்

தேடி எடுத்தோ

சட்டென்றோ

தொலைந்தவை எதிர்ப்படலாம்


ஆனால் திரும்பி வரும் எதுவும்

பழையது போல் இருப்பதில்லை !

1 comment:

இரசிகை said...

remba pidichchirunthathunga....:)

//ஆனால் திரும்பி வரும் எதுவும்

பழையது போல் இருப்பதில்லை//

ithu saththiyam.....

Post a Comment