Monday, September 28, 2009

கோலங்கள்.

நெடுஞ்சாலை நடுவில்
நீளும்
வெள்ளைக் கோடுகள்.
நீ இட்டது போல்
நேர்த்தியாய் இருக்கிறது!

_________________________

முன் நெற்றியிலோ
புடவைத்தலைப்பிலோ
எப்பொழுதேனும்
காணக்கிடைக்கும்
கோலப்பொடித் தீற்றல்
உன்
கோலங்களை விட
அழகு பெறுகிறது!
__________________________

புள்ளிகளால்
கம்பிகளால்
வண்ணங்களால்
படைக்க இயலாத
மற்றொரு
அழகிய கோலம்
நீ மட்டுமே!
_________________

புள்ளிகள் இட்டு
கம்பிகள் இழுத்து
நடுவில் பூவும் வைத்து
நிமிர்கையில்
என்னைப் பார்த்தாய்!
இப்போது
அந்த பூவும், நானும்
சிறைக்குள்!

1 comment:

Post a Comment