மனதின் ஈரத்தில்
முளைத்து எழுந்தது
அந்தக் கவிதை.
மரபை மீறியதென்று
மாமக்கள் சினந்தனர்.
எச்சரித்தனர்.
வாள் கொண்டு கிழித்தனர்.
காயங்கள் ஆறிய
என் கையிலும் இருக்கிறது
கூரிய வாள்!
மனதின் ஓரத்தில்
அந்தக் கவிதையும்!
க்ளிக் நாவலுக்கு திருப்பூர் தமிழ் சங்க விருது!
6 months ago
No comments:
Post a Comment