மனதின் ஈரத்தில்
முளைத்து எழுந்தது
அந்தக் கவிதை.
மரபை மீறியதென்று
மாமக்கள் சினந்தனர்.
எச்சரித்தனர்.
வாள் கொண்டு கிழித்தனர்.
காயங்கள் ஆறிய
என் கையிலும் இருக்கிறது
கூரிய வாள்!
மனதின் ஓரத்தில்
அந்தக் கவிதையும்!
இங்கிருந்துதான் வந்தான் - 2ம் அத்தியாயம்
2 weeks ago
No comments:
Post a Comment