Monday, October 26, 2009

கவிதைத்துளிகள்.

நாம் சொல்லிக்கொடுக்கிறோம்
என்பதுதான் துரதிர்ஷட்ம்.
மற்றபடி பாக்கியவான்கள்
குழந்தைகள்.


-----------------------



உள்ளும் புறமும் சத்தம்.
மூடப்பட்ட கதவு.
ஆலயம்.

19 comments:

புலவன் புலிகேசி said...

//மற்றபடி பாக்கியவான்கள்
குழந்தைகள்.//

பாக்கியவான்கள் என்பதை விட புத்திசாலிகள் (நம்மை விட). நல்லா இருக்கு...

ஈ ரா said...

அருமை...அருமை

Prabhu said...

நல்லாருக்கு.

ராகவன் said...

அன்பு வேல்ஜி,

உள்ளும் புறமும் சத்தம், மூடப்பட்ட கதவு, ஆலயம்,
அருமையான கவிதை, எத்தனை படிமங்களை விரிக்கிறது இந்த கவிதை.

முதல்கவிதை சரியான விமர்சனப்பார்வை உங்களுக்கு, அதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்! மேற்சென்று நம்மையே இடித்துக்காட்டுவது இதன் சிறப்பு. குழந்தைகளுக்கு தீனி போட சமூகமே வரவேண்டும், ஒரு பள்ளியோ, பெற்றோர்களோ மட்டும் போதாது. எப்போதுமே நாம் இழந்ததை அடுத்த தலைமுறைக்குத் தினிக்கும் பழக்கம் நம் எல்லோரிடமும் இருக்கிறது. நாம் பாக்கியவான்கள் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ளும் போது!

அன்புடன்
ராகவன்

க.பாலாசி said...

//நாம் சொல்லிக்கொடுக்கிறோம்
என்பதுதான் துரதிர்ஷட்ம்//

அய்யோ பாவம்....

//மற்றபடி பாக்கியவான்கள்
குழந்தைகள்.//

எங்கேயோ இடிக்குதே....

இரண்டாவதும் அருமை....

கலகலப்ரியா said...

superb..!

Ashok D said...

இப்பொழுது தான் உள் நுழைகிறேன், இரண்டுமே சிக்ஸர். இப்படி நேரடி கவிதைகளே எனக்கு மிகவும் பிடித்தமானவை.

மாதவராஜ் said...

நண்பரே!
முதல் கவிதை இன்னும் நன்றாக வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. குழந்தைகளுக்கு நம்மால் சொல்லிக்கொடுக்க முடியவில்லை என்பதும் முக்கியமானது.
‘மற்றபடி’ என்னும் வார்த்தை இந்தக் கவிதைக்கு சிறப்புக்களையும், அர்த்தங்களையும் சேர்க்கிறது.
இரண்டாவது கவிதை அருமை.
சரி. தட்டினால் கதவு திறக்கப்படுமா?

காமராஜ் said...

நான் இதுவரை கவனிக்கவில்லை என்பதுதான் மனக்கஷ்டம்.
மற்றபடி மாதுவும், ராகவனும் சொல்லிவிட்டார்கள்.
சென்ற பதிவின் குறைகளை மொத்தமாய் விழுங்கிக்கொண்டு
எழுந்து நிற்கிறது. நல்ல சொற்சிக்கனம். அழகு அழகு.

விஜய் said...

மிக
அழகு
வேல்ஜி


விஜய்

நசரேயன் said...

//நாம் சொல்லிக்கொடுக்கிறோம்
என்பதுதான் துரதிர்ஷட்ம்.
மற்றபடி பாக்கியவான்கள்
குழந்தைகள்.//

ஏன் நல்லா தூக்கம் வருமா ?

ப்ரியமுடன் வசந்த் said...

அசத்தல் இரண்டாவது மிகவும் பிடித்தது வேல்...

அகநாழிகை said...

கவிதைகள் அனைத்தும் வாசித்தேன். இன்னும் தொடர்ந்து எழுத நல்வாழ்த்துக்கள்.

- பொன்.வாசுதேவன்

உயிரோடை said...

துளிப்பா போல் அழ‌கு. தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்

சந்தான சங்கர் said...

அருமை வேல்ஜி..

velji said...

புலவன் புலிகேசி

ஈ.ரா

பப்பு

ராகவன்

க.பாலாசி.

கலகலப்ரியா.

அசோக்

மாதவராஜ்

காமராஜ்

கவிதை(கள்) விஜய்

நசரேயன்

ப்ரியமுடன் வசந்த்

அகநாழிகை

உயிரோடை

சந்தான சங்கர்

அனைவரின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!

மண்குதிரை said...

mika nanru

பா.ராஜாராம் said...

வாவ்!வேல்ஜி,கலக்குறியே சந்ரு!

Prasanna said...

அற்புதம்!!

Post a Comment