Thursday, October 8, 2009

காதல்


சிலர் சைவம்.
சிலர் அசைவம்.

சிலருக்கு வான்.
சிலருக்கு மண்.

சிலருக்கு நெருஞ்சி.
சிலருக்கு காக்காமுள்.

நிறைய ஆய்ந்தும்
நிறைவுறாத ஆய்வு.

விபத்து.
இருப்பினும்
பெட்டிச்செய்தி அல்ல!

காலம் காலமாய்
நடக்கும் கண்கட்டு வித்தை.

உணர்ந்தவரெல்லாம் சொன்னபின்பும்
பொழிப்புரை தேவைப்படும் இலக்கியம்!

அது, அதுவானால்
அதுவே சொல்லும்
ஆன்மீகம்!

2 comments:

இரசிகை said...

nallaayirukku........:)

"தாரிஸன் " said...

/காலம் காலமாய்
நடக்கும் கண்கட்டு வித்தை/


1000% true sir.....

romba nalla irukku..........

Post a Comment