Sunday, October 17, 2010

21 தங்கம்,28 வெள்ளி, 26 வெங்கலம்-ஒரு சாதனை!



15-10-2010 அன்று கமலா சுப்ரமணியம் பள்ளி,தஞ்ஞாவூரில் பள்ளிகளுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட SDAT(Sports Development Authority of Tamilnadu) திருநெல்வேலி மாணவர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். 21 தங்கம், 28 வெள்ளி, 26 வெங்கல பதக்கங்களை வென்று அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

16 - 10 - 2010 ல் நடைபெற்ற விழாவில் அமைச்சர் மைதீன்கான் அவர்களால் பாராட்டப்பெற்றனர்.

புகைப்படத்தில் மாணவர்களுடன் அமர்ந்திருப்பவர் பயிற்றுனர் பிரேம்குமார் அவர்கள். அவரின் பயிற்சியும்,ஊக்கமும் துணைவர மாணவர்கள் தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்து வருகிறார்கள். சரத் சடையப்பன், சேது மாணிக்கவேல், ஆதித்ய ஜுவாலா ஆகிய மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த சாதனையாகும்.

சிறார்களின் பயிற்சியில் வள்ளி,மகாராஜன் ஆகிய பயிற்றுனர்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.

அண்ணா ஸ்டேடியம் என்று நெல்லை மக்களால் பரவலாக அறியப்படும் இடத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்திற்கு வாய்ப்புள்ளவர்கள் நேரில் வந்தால் பலன்பெறலாம். நீச்சல் பயிற்சி மாணவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாக இருக்கிறது. ஆரோக்கியம் மேம்படுகிறது. போட்டிகளும்.பரிசுகளும்,சான்றிதழ்களும் வேறு!



இது, 2 தங்கம், 2 வென்கலப்பதக்கங்கள் வென்ற என் மகள் அமிர்தவர்ஷினி!

6 comments:

கணேஷ் said...

நல்ல விசயம்..பரிசுகள் வென்ற உங்களின் மகளுக்கு என் வாழ்த்துகள்...

Gayathri said...

super unga magalukku enathu vazhthukkal..arumayaana thagaval

தமிழ்போராளி said...

உங்கள் அன்பான மகளுக்கு என் வாழ்த்துக்களை சொல்லவும்..பகிர்வுக்கும் நன்றி

Chitra said...

இது, 2 தங்கம், 2 வென்கலப்பதக்கங்கள் வென்ற என் மகள் அமிர்தவர்ஷினி! ....Congratulations, Dear! :-)

சௌந்தர் said...

வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி மேலும் பல பதக்கங்ளை வாங்க வேண்டும்

புவனேஸ்வரி ராமநாதன் said...

பரிசுகள் வென்ற தங்கள் மகளுக்கும், ஊக்குவித்த
உங்களுக்கும் வாழ்த்துக்கள். மென்மேலும் நிறைய
பரிசுகள் வெல்ல வாழ்த்துக்கள்.

Post a Comment