கிருஷ்ணகிரி மாவட்டம்,போச்சம்பள்ளியில் அண்ணாஅறிவகம் பள்ளியில் +2 படித்த மாணவர் பள்ளி பேருந்து மோதி உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து பள்ளியும் ,தாளாளர் வீடும் தாக்கப்பட்டது.இதைக் கண்டிக்கும் விதமாக மெட்ரிக் பள்ளிகள் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இது ஜனனாயக உரிமை என்றாலும்,காலாண்டுத் தேர்வு நடைபெறும் நேரத்தில் திடீரென்று நேற்று அறிவிக்கப்பட்ட விடுமுறை லட்சக்கணக்கான மாணவர்களை கருத்தில் கொள்ளாத நடவடிக்கை.
மெட்ரிக்பள்ளிகள் இயக்குனர் அரசின் சார்பில் கடும் நடவடிக்கை இருக்கும் என அறிவிக்க இன்று காலை ஆரம்பித்தது திண்டாட்டம்.7.45க்கு மகளை எழுப்பி அவசரமாய் கிளப்பி, விட்டு வந்தாயிற்று.இல்ல மத்த ஸ்கூல்லாம் லீவுதானாம் என்கிற வதந்தி தொடர்ந்தது.இருக்கும் மாணவர்களை கொண்டு பள்ளி தொடர்ந்து நடைபெறுகிறது.
பள்ளிக்கட்டணம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டபின்புதான் இந்த தனியார்பள்ளிகள் சங்கம் தெரிய ஆரம்பித்திருப்பதும்,இது கோடீஸ்வரர்களின் சங்கம் என்பதால் கட்சிகளுக்கு single window collection point என்பதும் இதில் உள்ள அரசியல்.
அரசின் அறிவிப்பு
வருகிற 24ம் தேதி பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து தரப்பு மக்களும் அமைதியுடன் ஒத்துழைத்து நாட்டின்வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கவேண்டும் என்ற செய்தி அரசால் வெளியிடப்பட்டுள்ளது.இது அரசின் பாராட்டத்தக்க முயற்சி.
ஒரு SMS
Marriage is an institution where a boy loses his bachelor degree when a girl gains her masters.
இங்கிருந்துதான் வந்தான் - 2ம் அத்தியாயம்
1 week ago
7 comments:
உண்மை, தனியார் பள்ளி சங்கங்கள் கோடீஸ்வரகளின் சங்கங்கள் தான்
இப்படியும் சங்கங்கள் இருப்பது இப்போதுதான் தெரிகிறது.. கோடீஸ்வரர்களின் சங்கம் என்பது உண்மைதான்...
பள்ளிக்கட்டணம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டபின்புதான் இந்த தனியார்பள்ளிகள் சங்கம் தெரிய ஆரம்பித்திருப்பதும்,இது கோடீஸ்வரர்களின் சங்கம் என்பதால் கட்சிகளுக்கு single window collection
ம்ம்..
வருகிற 24ம் தேதி பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து தரப்பு மக்களும் அமைதியுடன் ஒத்துழைத்து நாட்டின்வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கவேண்டும் என்ற செய்தி அரசால் வெளியிடப்பட்டுள்ளது.இது அரசின் பாராட்டத்தக்க முயற்சி.
....நாட்டின் அமைதிக்காக பிரார்த்திப்போம்.
//அமைதியுடன் ஒத்துழைத்து நாட்டின்வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கவேண்டும் என்ற செய்தி அரசால் வெளியிடப்பட்டுள்ளது.இது அரசின் பாராட்டத்தக்க முயற்சி.//
நிச்சயம் பாராட்டத்தக்க முயற்சிதாங்க ..
சில தனியார் பள்ளிகள் அப்படித்தான் அவுங்க இஷ்டத்துக்கு செய்யுறாங்க ..?!?
SMS super.
anbudan RVS
எல்லோரும் ஒரே குரலில் பேசினால் கூட அது சேர்ந்திசையாக மாறும்.
Post a Comment