ஒவ்வொருத்தராய் கொல்வதற்கு
சலித்துப்போனான்.
மொத்தமாய் குழியிறக்கி,
புல்டோசர் ஏற்றி...
ஆயிரமாயிரம் முற்றுப்புள்ளிகள்.
லட்சமாய்
அவலக்குறிகள்
முகாம்களில்.
எஞ்சியவை
கேள்விக்குறிகளாய்
புலம்பெயர்ந்து.
ஆச்சரியக்குறியாய்
உலகின் இறுகியமெளனம்.
இதையெல்லாம் செய்தவனின்
ஆண்குறியை
அறுத்தால் என்ன.
இங்கிருந்துதான் வந்தான் - 2ம் அத்தியாயம்
1 week ago